search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்"

    • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவின் மக்கள் தொகையில் 12.92% முஸ்லிம்கள் உள்ளனர்
    • வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது

    கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்தது.

    வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளதாக அரசின் தரவுகளின்படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு-1ல் 17 முஸ்லிம் சமூகங்களும், பிரிவு-2ல் 19 முஸ்லிம் சமூகங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கர்நாடக அரசின் இந்த முடிவிற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அனைத்து முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது என்பது முஸ்லிம் மதத்தில் கல்வி மற்றும் சமூக ரீதியாக மிகவும் பின்தங்கிய சமூங்களுக்கான சமூக நீதியை குறைக்கும் செயல் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவின் மக்கள் தொகையில் 12.92% முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. #MonsoonSession #NCBCBill
    புதுடெல்லி:

    பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கொண்டு வரப்பட்டது . ஆனால், இந்த ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்குடன் ஆணையம் பரிந்துரைகளை வழங்கினாலும், அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால் அந்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.

    இந்நிலையில், இந்த ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா (123-வது திருத்தம்) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2-ம் தேதி எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

    அவையில் இருந்த 156 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க, மசோதா எதிர்ப்பின்றி நிறைவேறியது. இதனை அடுத்து ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் இந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடைக்கும். 
    ×